ஊட்டியிலிருந்து ஜனாதிபதி டெல்லி திரும்பினார்
கோயம்புத்தூர்:
ஊட்டியில் கடந்த 15 நாட்களாக தங்கியிருந்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் இன்று டெல்லி திரும்பினார்.
ஊட்டியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்த அவர் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தில்டெல்லி திரும்பினார்.
அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சங்கர், நலத்துறை அமைச்சர் செம்மலை, மாவட்ட ஆட்சியர்உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.
தனது மனைவி உஷாவுடன் கடந்த 8ம் தேதி நாராயணன் ஊட்டி வந்தார். அவருக்கு டெல்லியில் வந்திருந்த 2ஆயுர்வேத மருத்துவர்களும், கோவையைச் சேர்ந்த இயற்கை மருத்துவமையத்தின் டாக்டர்களும் சிகிச்சை அளித்துவந்தனர்.
அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் போட்டியிடும்எண்ணம் உள்ளதா இல்லையா என நாராயணன் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தால் மீண்டும் குடியரசுத் தலைவராக அவர் தயார்என்று தெரிகிறது. அதைவிட்டுவிட்டு ஆளும் பா.ஜ.க. ஒருவரையும் எதிர்க்கட்சிகள் தன்னையும் நிறுத்தினால்நாராயணன் போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது.
நாராயணனை மீண்டும் ஜனாதிபதியாக்க தயாராக இல்லை என பா.ஜ.க. தெரிவித்துவிட்டது. ஆனால், கம்யூனிஸ்ட்உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் பல்வேறு கட்சிகளில் உள்ள தலித் தலைவர்களும் நாராயணனையே மீண்டும்ஜனாதிபதியாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தும் ஜனாதிபதியாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பி.சி.அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்க பிரதமர் வாஜ்பாய் விரும்புகிறார்.
கடந்த 2 வாரங்களாக ஊட்டியில் நாராயணன் இருந்தபோது அடுத்த ஜனாதிபதி குறித்து டெல்லியில் தீவிர விவாதம்நடத்தப்பட்டது. ஆனால், நாராயணனைப் பொறுத்தவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
டெல்லி போய்ச் சேர்ந்துள்ள ஜனாதிபதி இன்னும் இரண்டொரு நாட்களில் தனது நிலையை வெளிப்படுத்துவார்என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications