"ஹிட் அன்ட் ரன்"... இறப்போர் குடும்பத்திற்கு ரூ.25,000
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அடையாளம் தெரியாத வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.25,000 இழப்பீட்டுநிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக சட்டப் பணி ஆணையத் தலைவர் நீதிபதி சம்பத் குமார் தெரிவித்தார்.
சென்னையில் விரைவு நீதிமன்ற நிகழ்ச்சி ஒன்றின் போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் அடையாளம் தெரியாத வாகனங்களில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிக அளவில்உள்ளது. இவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.
காயம் அடைபவர்களுக்கு ரூ.12,000 வரை இழப்பீடு வழங்கப்படும். இவை குறித்து பொதுமக்களிடையேவிழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.
சென்னையில் உள்ள நான்கு அரசு மருத்துவமனைகள் மூலம் இந்த விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்படும்என்றார் சம்பத் குமார்.












Click it and Unblock the Notifications