கோட்டையில் விஷம் குடித்தவர் பரிதாப சாவு
சென்னை:
சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் சமீபத்தில் விஷம் குடித்தசென்னையச் சேர்ந்த டெய்லர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அசோக்குமார் என்ற டெய்லர் சில நாட்களுக்கு முன்பு கோட்டைக்கு விஷபாட்டிலுடன் வந்தார். அங்கு விஷம் குடித்தார். உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் நேற்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சை பலனின்றி அசோக்குமார்பரிதாபமாக இறந்தார்.
தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் தனக்கு தையல் இயந்திரம் மற்றும் ரூ.10,000 கடனுதவி செய்யுமாறும்கோரி முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்பு அசோக்குமார் மனு கொடுத்திருந்தார்.
ஆனால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் தான் அவர் கோட்டை வளாகத்தில்வந்து விஷம் குடித்தார்.
கடந்த மார்ச் 27ம் தேதி கோயம்புத்தூரைச் சேர்ந்த வேலு-நளினி தம்பதியர் தலைமைச் செயலகத்திற்கு வந்துமுதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடியாத சோகத்தில் விஷம் குடித்து உயிரிழந்தனர்.
இந்நிலையில் விஷம் குடித்த அசோக் குமாரும் இறந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications