இதற்கெல்லாம் பயந்து விட மாட்டோம்: இந்தியா
டெல்லி:
தற்போது நடந்து வரும் ஏவுகணைச் சோதனையெல்லாம் வழக்கமான ஒன்று தான் என்று பாகிஸ்தான் கூறுவதுசுத்தப் பொய் என்று இந்தியா கூறியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளிடமும் முன் கூட்டியே தெரிவித்து விட்டு, இன்று ஏவுகணைச்சோதனையைப் பாகிஸ்தான் தொடங்கியது.
இன்று காலை கோரி என்ற ஏவுகணையை ஏவிப் பரிசோதித்த பாகிஸ்தான், வரும் 28ம் தேதி வரை சிறியஏவுகணைகள் முதல் இலகு ரக ஏவுகணைகளை சோதிக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.
வழக்கமாக நடக்கும் சோதனை தான் இது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் இதை இந்தியா வன்மையாகமறுத்துள்ளது.
ஏவுகணைச் சோதனை வழக்கமாக நடைபெறும் ஒன்று தான் என்று பாகிஸ்தான் கூறுவதெல்லாம் சுத்தப் பொய்என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ் இன்று கூறினார். அவர் மேலும்கூறியதாவது:
வழக்கமான ஒன்று என்றால் இவ்வளவு நாளும் இந்தச் சோதனையை நடத்தாமல் தற்போது எல்லையில் பதற்றம்அதிகரித்துள்ள நிலையில் ஏன் நடத்த வேண்டும்?
பாகிஸ்தான் மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஏவுகணைச் சோதனைகளைஅந்நாடு நடத்தி வருகிறது. இதனால் இந்தியா ஒன்றும் பயந்து விடப் போவதில்லை.
எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக இந்தியா இதுவரை பேச்சுவார்த்தையைத் தான் ஆயுதமாகப்பயன்படுத்தி வந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானோ தொடர்ந்து எல்லை வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளைஅனுப்பி பயங்கரவாதத்தைத் தூண்டி விட்டுக் கொண்டே உள்ளது.
அந்நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்பதிலும் சந்தேகமேஇல்லை என்றும் நிருபமா கூறினார்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை வட்டாரங்களும் இதே கருத்துக்களையே பிரதிபலித்தன.
ஒன்றும் சீரியஸ் இல்லை - வாஜ்பாய்:
இதற்கிடையே பாகிஸ்தான் ஏவுகணைச் சோதனையை இந்தியா அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லைஎன்று பிரதமர் வாஜ்பாய் இன்று கூறினார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வாஜ்பாய் இவ்வாறு தெரிவித்தார்.
ஓய்வுக்காக அவர் மணாலி சென்றுவிட்ட போதிலும், எல்லை பதற்றம் குறித்தே வாஜ்பாய் தன்னுடைய முழுகவனத்தையும் செலுத்தி வருகிறார்.
அவரைச் சந்திப்பதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் தேசிய பாதுகாப்புஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா ஆகியோர் மணாலி விரைந்துள்ளனர்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications