For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலூர் ராணுவ வீரர் காதலியுடன் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

பள்ளிகொண்டா:

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் ஒரு ராணுவ வீரர் தன் காதலியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பள்ளிகொண்டா அருகே உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (27). இவர் காஷ்மீர் எல்லையில்ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இவருடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஈஸ்வராபுரத்தில் வசித்துவருகிறார். அவருக்கு சக்தி (27) என்ற ஒரு தங்கை உண்டு. சக்திக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.

விஜயகுமார் விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் போது நாகர்கோவிலில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கும்செல்வதுண்டு. அப்போது விஜயகுமாருக்கும் சக்திக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் ஒரு நாள் திருமணம் செய்து கொண்டு விஜயகுமாரின் பெற்றோரிடம் சென்றுள்ளனர். ஆனால்விஜயகுமாரின் பெற்றோர் அவர்களின் திருமணத்தை ஏற்கவில்லை. வீட்டிலும் சேர்க்க மறுத்துவிட்டனர்.

எனவே, அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் நான்கு நாட்கள் கழித்து மீண்டும்கன்னிகாபுரத்துக்கு வந்த விஜயகுமார், நேராகத் தன்னுடைய நிலத்திற்குச் சென்று தன் புது மனைவியான சக்தியுடன்பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தான் அவர்கள் இருவரும்தற்கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பள்ளிகொண்டார் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X