வி.எச்.பிக்கு அல்-காய்தா கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஹாலந்து நாட்டில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகிகளுக்கு அல்-காய்தா தீவிரவாதிகள் மிரட்டல்விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து வி.எச்.பியின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோர் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
இது தொடர்பாக அல்-காய்தா இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது. ஹாலந்தில் உள்ள கோவில்களை மூடவேண்டும் எனவும் தங்களுக்கு 10,000 ஈரோ கரன்சியையும் தர வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
3 வாரங்களுக்குள் இதைச் செய்யத் தவறினால் ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்படுவார்கள்,அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கிரிராஜ் கூறியுள்ளார்.
இந்த இ-மெயில் எவ்வளவு தூரத்துக்கு உண்மையானது என்பது குறித்து ஹாலந்து போலீசார் ஆராயந்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications