அக்னி ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் நீண்ட தூரம் சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணையான அக்னி இந்திய ராணுவத்திடம்ஒப்படைக்கப்பட்டது.
இதுவரை இந்த ஏவுகணைத் தயாரிப்பும் பராமரிப்பும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவின்(டி.ஆர்.டி.ஓ.) கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
இப்போது இதன் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை நேரடியாக இந்திய ராணுவத்தின் வசம்தரப்பட்டுவிட்டது.
அக்னி ஏவுகணைகள் கிட்டதட்ட 1000 கிலோ வெடிமருந்துகளுடன் 2,500 கி.மீ. வரை சென்று துல்லியமாகத்தாக்கும் திறன் கொண்டவை.
ஏற்கனவே, ராணுவத்தின் வசம் பிருத்வி ரக ஏவுகணைகள் தரப்பட்டுவிட்டன. அவற்றை ராணுவம் எல்லைப்பகுதியில் நிலை நிறுத்தவும் ஆரம்பித்துவிட்டது. இப்போது அக்னி ஏவுகணைகளையும் ராணுவம் பாகிஸ்தானைக்குறி வைத்து நிறுத்த ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications