வேலை செய்த வீட்டிலேயே கொள்ளை: கணவன், மனைவி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மைலாப்பூரில் வேலை செய்த வீட்டிலேயே கொள்ளையடித்த டிரைவர், அவரது மனைவி, சகோதரரைபோலீசார் கைது செய்தனர்.

மைலாப்பூரில் சாலைத் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர் சில நிறுவனங்களை நடத்தி வரும்தொழிலதிபர். சில நாட்களுக்கு முன் இவர் குடும்பத்தினரோடு வெளியூர் சென்றிருந்தார்.

அப்போது இவரது வீட்டில் கொள்ளை நடந்தது. வீட்டிலிருந்த ரூ. 9 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அவரது வீட்டு ஜன்னல் கம்பியை வளைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருந்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த வீட்டின் கார் டிரைவர் பாலச்சந்திரன் தான் இந்தக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தனது மனைவி காந்திமதி,சகோதரர் ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தராஜ் வீட்டில் நுழைந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டன. இவர்களின் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்அங்கிருந்த ரூ. 5.5. லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டது.

மீதி பணத்தை இவர்கள் செலவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+