தேர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நடந்த தேர் திருவிழாவில் ஒரு வாலிபர் தேர் சக்கரத்தில்சிக்கி பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
கந்தர்வக்கோட்டை அருகே உள்ளது குளத்தூர்நாடு நாயக்கன்பட்டி கிராமம். இங்கு காரி அழகர் கோவிலில்வைகாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் கடந்த வாரம் இந்த விழா வெகு சிறப்பாக தொடங்கியது. நேற்று முன் தினம் இரவு இக்கோவிலின்தேரோட்டம் நடைபெற்றது.
பக்தர்கள் தேரை இழுத்துக் கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட பாக்கியராஜ் (19),திருநாவுக்கரசு (25), நரசிம்மன் (38) ஆகிய மூவரும் தவறிப் போய் கீழே விழுந்து தேர்ச் சக்கரத்தில் சிக்கினர்.
இந்த விபத்தில் பாக்கியராஜ் உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications