முஷாரப் பேச்சால் இந்தியா கோபம்
டெல்லி:
தன் நாட்டு மக்களுக்குப் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்பின் தொலைக்காட்சி உரைஇந்தியாவின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சரான ஒமர் அப்துல்லாகூறினார்.
நேற்றிரவு தன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முஷாரப், இந்தியா தான் போருக்குத் தூண்டி விடுகிறது என்றுதிமிர்த் தனமாகப் பேசினார்.
ஒவ்வொரு பாகிஸ்தானியனும் காஷ்மீரைத் தன் உயிருக்கும் மேலாக நினைக்கிறான். எனவே காஷ்மீர் விடுதலைப்போராட்டத்துக்குப் பாகிஸ்தான் எப்போதும் போல ஆதரவளிக்கும் என்றும் முஷாரப் கூறினார்.
முஷாரப் பேசிய அடுத்த சிறிது நேரத்திலேயே ஒமர் அப்துல்லா இதற்குப் பதிலளிக்கும் வகையில் நிருபர்களிடம்பேசினார்.
முஷாரப்பின் பேச்சினால் இந்தியா மேலும் கோபமடைந்துள்ளது என்று ஒமர் கூறினார்.
கடந்த ஜனவரி 12ம் தேதி என்ன பேசினாரோ அதையே தான் திரும்பவும் பேசியுள்ளார் முஷாரப் என்றார் ஒமர்.
ஆனாலும் முஷாரப்பின் பேச்சுக்கு இந்தியாவின் முறையான பதிலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்இன்று பிற்பகல் 3.30 மணிக்குத் தெரிவிப்பார்.












Click it and Unblock the Notifications