இந்தியா போரைத் தூண்டுகிறது: முஷாரப் திமிர் பேச்சு
இஸ்லாமாபாத்:
எக்காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தான் போரைத் தூண்டி விடாது என்று அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளரானபர்வேஸ் முஷாரப் கூறினார்.
பாகிஸ்தான் நாட்டு மக்களுக்காக நேற்று இரவு அவர் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய போது இவ்வாறுதெரிவித்தார்.
எல்லை வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதத்தைத் தூண்டி வரும் பாகிஸ்தானின் அதிபரே இவ்வாறுபேசியுள்ளது வேடிக்கையாகத் தான் உள்ளது. திமிராகவும் உள்ளது. அவர் மேலும் ஆற்றிய உரையில்,
ஜம்மூவில் உள்ள ராணுவ முகாம் மீதும் பஸ் மீதும் பயங்கரவாதிகள் தான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.பாகிஸ்தானுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அந்தப் பயங்கரவாதிகள் இதைச்செய்துள்ளனர்.
பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உலகின் எந்தப் பகுதியிலும் இருக்க பாகிஸ்தான் அனுமதிக்காது என்பதைத் தான்ஜனவரி 12ம் தேதி உரையில் கூறினேன். இப்போதும் அதையே வலியுறுத்துகிறேன்.
காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும். காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மீண்டும்பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். இதற்கு உலக நாடுகள்முயற்சிகளை எடுக்க வேண்டும்.
காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தான் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்கிறது என்று இந்தியா தொடர்ந்து பொய்யானதகவலையே அளித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்தியாவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை. அமைதியையே பாகிஸ்தான் மக்களும் நானும்விரும்புகிறோம். ஆனால் எங்கள் மீது வலுக்கட்டாயமாகப் போர் திணிக்கப்பட்டால் தக்க பதிலடி கொடுப்போம்என்றார் முஷாரப்.