அணுகுண்டுகள் ரெடி: பாக். விஞ்ஞானி மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

போர் வந்தால் அதைச் சமாளிப்பதற்குத் தேவையான அணுகுண்டுகள் பாகிஸ்தானிடம் தயாராக உள்ளன என்றுஅந்நாட்டு விஞ்ஞானியான பர்வேஸ் ஹூட்பாய் கூறியுள்ளார்.

எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதையடுத்து பாகிஸ்தான் "மளமள"வென்று அணுகுண்டுகளைத்தயாரித்துக் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவை பாகிஸ்தானின் கோரி ரக ஏவுகணை உள்ளிட்ட பல ஏவுகணைகளிலும் பொருத்தப்பட்டு விட்டதாகவும்ஹூட்பாய் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள காயிதே ஆசம் பல்கலைக்கழகத்தின் அணு இயற்பியல் துறையின் பேராசிரியராகப்பணிபுரிந்து வரும் ஹூட்பாய் இது தொடர்பாக "டைம்ஸ்" பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

கார்கில் போர் முடிவடைந்த நிலையிலேயே பாகிஸ்தான் இரவு பகலாக அணுகுண்டுகளைத் தயாரிக்கும் பணியில்ஈடுபட்டு வந்தது.

தற்போது நாங்கள் போருக்கு முழு அளவில் தயாராகி விட்டோம். ஏற்கனவே கணக்கிட்டதை விட அதிகமாகவேஎங்களிடம் தற்போது அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன.

பெரும்பாலான அணுகுண்டுகள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டும் விட்டன என்றார் ஹூட்பாய்.

அவருடைய பேட்டியின் படி பாகிஸ்தானிடம் எப்படியும் 50 முதல் 100 அணுகுண்டுகள் வரை இருக்கும் என்றுகருதப்படுகிறது.

அணுகுண்டை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இந்தியாவின் அக்னி ஏவுகணை தற்போது ராணுவத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அக்னி ஏவுகணையில் அணுகுண்டுபொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+