கலெக்டரிடம் மனு எழுதிக் கொடுப்பதாக கூறி மோசடி: 7 பேர் கைது
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு எழுதிக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றிப் பணம் பறித்த 7 பேரைப்போலீசார் இன்று கைது செய்தனர்.
பொது மக்கள் தங்களுடைய குறைகளை கலெக்டரிடம் கூறுவதற்காக பொது மக்கள் மனு எழுதிக் கொடுப்பதுவழக்கம்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதிக் கொடுப்பதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டுவருகிறது. மனு எழுதிக் கொடுக்கும் இந்தக் கூட்டம் அதற்காக குறிப்பிட்ட தொகையையும் பெறுவது வழக்கம்.
இந்நிலையில் பொது மக்களிடம் மனு எழுதி நேரடியாக கலெக்டரிடம் கொடுப்பதாகக் கூறி ஏழு பேர் கொண்ட ஒருகும்பல் ஒரு கணிசமான தொகையை சிலரிடமிருந்து வாங்கியது. ஆனால் குறிப்பிட்ட படி அவர்கள் அந்தமனுக்களை கலெக்டரிடம் சேர்க்கவில்லை.
இதை அறிந்த அங்குள்ள தாசில்தார் ஒருவர் இவர்களைப் பற்றி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
போலீசாரும் உடனடியாகச் செயல்பட்டு சண்முகம், நடராஜன் உட்பட ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.