எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்?
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது. சுமார் 6லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் இந்த தேர்வினை எழுதினர். இந்த ஆண்டு கூடுதலாக 50மையங்களில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.
தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதமே முடிந்து விட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்துஅனைத்து பணிகளும் கூட முடிவடைந்து தேர்வு முடிவுகள் மே 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர்தம்பிதுரை தெரிவித்தார்.
ஆனால் மே 28ம் தேதி ஆகியும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து இன்னும் எந்தவிதசெய்தியும் வெளி வரவில்லை.
மே 29 அல்லது 30ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாகவும் நேற்றுசெய்திகள் வெளியாகின. ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் பழனிவேலு கூறியதாவது:
அரசு விவர தொகுப்பில் தேர்வு பணிகள் முடிந்து விட்டதாக கூறினால் தான், தேர்வு முடிவுகள் வெளியாகும்தேதியை நிர்ணயிக்க முடியும்.
அரசு விவர தொகுப்பு இதுவரை எதுவும் கூறவில்லை. எனவே, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் எப்போதுவெளியாகும் என்று என்னால் கூற இயலாது என்று கூறினார் பழனிவேலு.












Click it and Unblock the Notifications