ஓடும் மினி பஸ்சில் "குவா குவா"
தஞ்சாவூர்:
கும்பகோணம் அருகே ஓடும் மினிபஸ்சில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது.
கும்பகோணம் அருகே உள்ள புளியம்பாடி காலனியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி ரதி (25).இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் ரதி கர்ப்பமானார்.
ரதிக்கு பிரசவ வலி எடுத்தவுடன், அவரைக் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்க அவரது குடும்பத்தினர்முடிவு செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் புளியம்பாடியிலிருந்து கும்பகோணத்திற்கு ஒரு மினிபஸ்சில் சென்றனர்.
ஆனால் அந்த மினி பஸ்சில் போய்க் கொண்டிருக்கும் போதே ரதிக்கு பிரசவ வலி அதிகமானது. பஸ்சில் பயணம்செய்த பெண் பயணிகள் ரதியைப் பாதுகாப்புடன் சூழ்ந்து நிற்க அவர் ஒரு அழகான ஆண் குழந்தையைபெற்றெடுத்தார்.
இதன் பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ரதியும் குழந்தையும் சேர்க்கப்பட்டனர். தாயும் சேயும்தற்போது நலமாக உள்ளனர்.
ஆட்டோவில் பிரசவம்
இதற்கிடையே தஞ்சை மேலவீதியைச் சேர்ந்த ஒரு பெண் ஆட்டோவிலேயே குழந்தை பெற்றார்.
நிறைமாத கர்ப்பிணியான அந்தப் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்படவே தஞ்சையில் உள்ள ராஜாமிராசுதார் மருத்துவமனைக்கு அவர் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டார்.
அந்த தெற்கு வீதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த பெண்ணிற்கு ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது.
அதன் பிறகு அந்த பெண்ணும் குழந்தையும் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.