மேட்டூர் அணையில் நீர் திறக்க அதிகாரிகள் மறுப்பு: விவசாயிகள் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறந்து விடுவதைப் போல் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்படாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது 39 அடி தண்ணீர் மட்டுமே இருப்பதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக தண்ணீரைத் திறந்துவிட மாட்டோம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.

தற்போதுள்ள 11 டி.எம்.சி. நீரில் ஏழு டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே எங்களால் திறந்து விட முடியும். ஆனால்குறுவை சாகுபடிக்கு 90 டி.எம்.சி. தண்ணீர் தேவை. அதனால் தான் இந்த ஆண்டு மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப்போவதில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு இதே சமயம் கிட்டத்தட்ட 100 அடி வரை மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்தது. அதனால் கடந்தஆண்டு ஜூன் 12ம் தேதி வழக்கம் போல தண்ணீர் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப்படாது என்று அறிவிக்கப்பட்டதை அறிந்து காவிரி டெல்டா பாசனவிவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

குறுவையில் விளைந்துள்ள பயிர்களை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு மே 31ம் தேதி வரை வந்து சேர வேண்டிய 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு இன்னும்காவிரியில் திறந்து விடவில்லை என்று தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமானபன்னீர்செல்வம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+