குஜராத் பஸ்களில் குண்டுவெடிப்பு: 12 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

அகமதாபாத் நகரில் இன்று காலை 10 மணிக்கு 2 பஸ்களிலும் மற்றொரு பொது இடத்திலும் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 12 பேர் காயமடைந்தனர்.

மேலும் இரண்டு பஸ்களில் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் வெடிப்பதற்கு முன்பே மீட்கப்பட்டுஅழிக்கப்பட்டன.

இன்று காலை சுமார் 10 மணிக்கு அகமதாபாத் நகரின் மையப் பகுதியில் உள்ள கிருஷ்ணா மந்திர் ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஒரு டவுன் பஸ்சில் பயங்கரச் சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது.

அடுத்த சிறிது நேரத்திலேயே வாஸ்னா பகுதியில் சென்று கொண்டிருந்த மற்றொரு பஸ்சிலும் குண்டு வெடித்தது.இதையடுத்து அங்கு பெரும் பீதி நிலவியது. குண்டு வெடிப்பில் 12க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தப் பீதி மறையும் முன்பே இந்நகரின் குருகுல் பகுதியில் ரோட்டில் மற்றொரு குண்டும் பயங்கரச் சத்தத்துடன்வெடித்தது. இதையடுத்து அகமதாபாத் மக்கள் மேலும் பீதி அடைந்துள்ளனர்.

இன்னும் எங்கெல்லாம் குண்டு வைக்கப்பட்டிருக்கிறதோ என்ற பீதியுடன் மக்கள் பதறிச் சிதறி ஓடினர்.

இதையடுத்து அகமதாபாத்தில் அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. பயணிகளை இறக்கிவிடும்படிடிரைவர்கள், கண்டக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் நடுரோட்டில்இறக்கிவிடப்பட்டன.

அனைத்து பஸ்களையும் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையிட்டனர். இதில் மேலும் இரண்டுபஸ்களில் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.

இந்த மூன்று குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும் சுமார் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஆனால் இதுவரைஉயிரிழப்பு ஏதும் இல்லை. இரண்டு பேரின் நிலைமை மோசமாக உள்ளது.

கடந்த பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் ஏற்பட்டபயங்கரமான வன்முறைச் சம்பவங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஆலோசகராக பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பியான கே.பி.எஸ். கில்நியமிக்கப்பட்டதும் அம்மாநிலத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே கடந்த 19ம் தேதி மீண்டும் கோத்ராவிலும் அகமதாபாத்திலும் வன்முறை தலை தூக்கியது.வன்முறைக் கும்பலால் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் இருவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்உயிரிழந்தனர்.

ஆனால் மீண்டும் அங்கு வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இன்று அகமதாபாத் நகரில் நடந்துள்ள இந்தக்குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என போலீசார் கூறுகின்றனர். இந்த குண்டுகளில்ஆர்.டி.எக்ஸ் போன்ற சக்தி வாய்ந்த வெடிபொருள் ஏதும் இல்லை. இவை உள்ளூர் குண்டுகள்.

நேற்று முன் தினம் வன்முறை தொடர்பாக பலரை போலீசார் கைது செய்தனர். இதன் எதிரொலியாகவே இந்தக்குண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+