கோட்டையில் மனு கொடுப்பவர்களுக்கு உதவ மன நல மருத்துவர் குழு ரெடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருபவர்களுக்கு உதவுவதற்காக 6உளவியல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைத் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டைக்கு முதல்வரிடம் மனு கொடுப்பதற்காக ஏராளமானோர்வருவது வழக்கம். ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வந்த பிறகு ஆயிரக்கணக்கன மக்கள் மனு கொடுப்பதற்காகக்குவியத் தொடங்கினர்.

மனு கொடுத்தவர்களில் பலருக்கு உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மனம் நொந்து சிலர் தற்கொலைக்குமுயன்றனர். இதுவரை கோட்டை வளாகத்தில் 9 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களில்கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு தம்பதியும் சென்னையைச் சேர்ந்த ஒரு டெய்லரும் இறந்தனர்.

தலைமைச் செயலக வளாகத்தில் தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பதைக் கண்டித்த ஜெயலலிதா இதுபோன்ற மனநிலையில் வருபவர்களுக்கு உதவுவதற்காக மனநல மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம்ஆலோசனையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஜெயலலிதா உத்தரவின்படி தற்போது 6 மன நல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோட்டைக்கு மனுகொடுக்க வருபவர்களிடமிருந்து மனுக்களை முதல்வரின் செயலாளர் பீலா ராஜேஷ் நேரடியாகப் பெற்றுக்கொள்வார்.

வித்தியாசமாக தெரியும் நபர்கள் மன நல மருத்துவ ஆலோசனைக் குழுவிடம் அனுப்பப்படுவர். மனு கொடுக்கவந்தவருக்கு மருத்துவ ஆலோசனை தேவை என்று கருதப்படும் பட்சத்தில் அவர்கள் குறிப்பிட்டமருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்.

சில நாட்களுக்கு முன் மனு கொடுக்க வந்த நபர் ஒருவர், ஜெயலலிதா தனக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்வதாகவாக்குறுதி அளித்திருந்தார் என்று கூறி மனு ஒன்றைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப் போன்றவர்களுக்கு உதவவே இப்போது மன நல மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+