For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களை இணைக்க ரூ.78 கோடியில் பறக்கும் பாலம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்வே நிலையங்களை இணைக்க ரூ.78 கோடி செலவில்அமைக்கப்படவுள்ள பறக்கும் பாலம் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்வே நிலையங்களை இணைக்கும் திட்டத்தைரயில்வே போர்டு தீட்டியது. இது குறித்து தமிழக அரசு பலமுறை மத்திய அரசை வற்புறுத்தியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த ரயில்வே மத்திய அமைச்சர் நிதீஷ் குமாரிடம் நிருபர்கள் இதுகுறித்துகேட்டபோது இத்தகைய குற்றச்சாட்டை மறுத்தார். மேலும் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும்அவர் கூறினார்.

இதையடுத்து, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்யும்படி தென்னக ரயில்வேக்கு ரயில்வே போர்டு உத்தரவிட்டது.தென்னக ரயில்வேயும் இந்தத் திட்டத்தை ஆய்வு செய்து அதில் சில மாற்றங்களை செய்துள்ளது.

இப்புதிய திட்டத்தின் படி சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்ள் பறக்கும் பாலம் மூலம் இணைக்கப்படும். இந்தரயில்வே மேம்பாலம் ரூ.78கோடி செலவில் உருவாகும்.

இந்த திட்டத்திற்கு தற்போது தமிழக அரசும் ஆர்வம் காட்டி வருகிறது. பாலம் கட்ட ஆகும் செலவில் பாதியைத்தரவும் தமிழக அரசு முன் வந்துள்ளது.

இந்த பாலம் மத்தியச் சிறை வழியாக அமைக்கப்படுவதால் பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்படும் என்றும்சிறையை வேறு இடத்திற்கு மாற்றினால் தான் பாலம் கட்டும் பணி விரைவில் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X