அணு குண்டால் தாக்குவோம்: பாக். மீண்டும் மிரட்டல்
ஐ.நா. சபை:
இந்தியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என பாகிஸ்தான் நேரடி மிரட்டல் விடுத்துள்ளது.
எக்காரணம் கொண்டும் முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம் என இந்தியா கூறியுள்ளது.
ஆனால், எங்களிடம் அப்படிப்பட்ட கொள்கை ஏதும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் புதிய தூதர் முனீர் அக்ரம் இதைக் கூறினார். ஐ.நா. சபையில்பதவியேற்ற இரண்டாவது நாளில் அவர் நிருபர்களிடம் இவ்வாறு பேசியிருப்பது மற்ற நாடுகளின் தூதர்களுக்குபெரும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறுகையில், எங்களால் இந்தியத் தாக்குதலை சமாளிக்க முடியாவிட்டால் அணு ஆயுதங்களைப்பயன்படுத்துவோம். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாவிட்டால் எங்களை இந்தியா கொன்று குவித்துவிடும்.அதை அனுமதிக்க மாட்டோம்.
இதனால் முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை எல்லாம் நாங்கள் ஏற்கமாட்டோம்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி தாக்கினாலோ, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மீதுதாக்கினாலோ, விமான தாக்குதல் நடத்தினாலோ, பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில்தாக்கினாலோ அதை நாங்கள் போராகவே கருதுவோம் என்றார்.
முனீர் இந்தப் பேச்சு குறித்து எரிச்சலடைந்துள்ள ஐ.நா. அதிகாரிகள் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கமறுத்துவிட்டனர்.
எல்லை தாண்டிப் போய் தாக்குவோம்:
இதற்கிடையே தனது படையினரிடையே பேசிய பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்,
எங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குவோம். இதில் யாருக்கும் சந்தேகமேவேண்டாம் என்றார்.
இந்தியா கருத்து:
ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பேசியிருப்பதும், முஷாரபின் பேச்சையும் வெத்து வேட்டு பேச்சு என இந்தியாகருத்துத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தீவிரவாதிகள் பட்டியல்:
இந்தியாவில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள தீவிராத அமைப்புகளைச் சேர்ந்த 20 பேரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என இந்தியா கோரி வருகிறது.
இந் நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 32 தீவிரவாதிகள் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்களை எங்களிடம்ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளது.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்போது இந்தப் பட்டியல் இந்தியாவிடம் தரப்படும் எனபாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொய்னுதீன் ஹைதர் கூறினார்.
-
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
"பில் கட்டக் கூட காசு இல்லையா?" கம்பி நீட்டிய பாகிஸ்தான்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications