For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரியில் மீனவர்கள் மோதலைத் தடுக்க பெண்கள் அமைதிக் குழு

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் அடிக்கடி நடக்கும் கோஷ்டி மோதல்களைத் தவிர்ப்பதற்காகபெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைதிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி மோஷ்டி மோதல், வகுப்புமோதல் நடப்பது சகஜமானது.

இதைத் தவிர்க்க பெண்களைக் கொண்ட அமைதிக் குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. மாவட்டத்தில்மொத்தம் உள்ள 43 மீனவக் கிராமங்களில் இந்த அமைதிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் 3 பெண்கள், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு வருவாய் அதிகாரி ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். மீனவ கிராமங்களில் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் குழுக்கள் தலையிட்டு அமைதிஏற்படுத்தும்.

இதுதவிர மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடியைத் தலைவராகவும், மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் சஞ்சய் குமாரை துணைத் தலைவராகவும் கொண்ட மாவட்ட அளவிலான கடலோர குழுவும்அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை முற்றினால் இவர்கள் தலையிடுவார்கள்.

பெண்களைக் கொண்ட அமைதிக் குழுக்கள் மாதம் ஒருமுறை கிராமங்களில் கூடுவர். பிரச்சினை சிறிதாகஇருந்தால் அவர்களே தீர்த்துக் கொள்வர். பெரிதாக இருந்தால் அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்குகொண்டு செல்லப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X