ஆயிரம் கடா வெட்டினாலும் ஜெ. பாவம் தீராது: இளங்கோவன்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவினர் செய்த அராஜகத்திற்கு, ஆயிரம் கடா வெட்டி அன்னதானம் செய்தாலும், நூறுயானைகளை கோவில்களுக்கு கொடுத்தாலும் கூட பாவம் தீராது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்தெரிவித்துள்ளார்.
சைதை தொகுதி தேர்தல் குறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைதை தொகுதியில் நடந்த தேர்தலில்போலீஸாரின் துணையோடு அதிமுகவினர் செய்த அராஜகங்கள், சர்வாதிகாரம், மிருகத்தனம் ஆகியவற்றிற்கு எதிர்காலத்தில்அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
கடந்த 1996ல் நடந்த தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்தை இவர்கள் மறந்து விட்டார்கள். அதை மறுபடியும் ஞாபகப்படுத்திக்கொள்ளட்டும்.
இவர்கள் செய்த பாவத்தைத் தீர்க்க ஆயிரம் கடா வெட்டி அன்னதானம் செய்தாலும், நூறு யானைகளை கோவிலுக்குவழங்கினாலும் பலன் கிடைக்காது.
திரு.அருள் போன்ற கண்ணியமான காவல்துறை அதிகாரிகள் இருந்த இடத்தில் இப்போது இருப்பவர்கள் காவல்துறையின்பெருமையைக் குலைக்கும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.
வாட்டசாட்டமாக இருந்தால் மட்டும் போதாது, பாகுபாடின்றி செயல்படவும் வேண்டும். அப்படி இல்லாதவர்கள் அம்மா வீட்டில்வேலை செய்யத்தான் உகந்தவர்கள்.
சைதாப்பேட்டையில் நடத்தப்பட்ட தேர்தல் முஷாரப் நடத்திய தேர்தல் போல இருக்கிறது. எப்படி, முஷாரப் அவரே தேர்தல்நடத்தி, அவரையே வெற்றி பெற்றவராக அறிவித்துக் கொண்டாரோ அதுபோலவே அம்மையாரும தன்னை அறிவித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு மிகக் காட்டமான அறிக்கை விட்டுள்ளார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications