சைதாப்பேட்டை வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு: மேலும் 2 அதிகாரிகள் இன்று விசாரணை
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இத் தொகுதியில் நடந்த அதிமுகவினர் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இங்கு சிலவாக்குச் சாவடிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இங்கு மொத்தம் அமைக்கப்பட்ட 273 வாக்குச் சாவடிகளில் 80ல் பெரும் முறைகேடுகள் நடந்ததாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இங்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளது. இதே கோரிக்கையை காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும்விடுத்துள்ளன.
இதையடுத்து இங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டையில் வாக்குப் பதிவின்போது அதிமுகவினர் செய்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து மத்தியதேர்தல் பார்வையாளர்கள் நேற்று விசாரணை நடத்தினர். நேற்றே தலைமை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கையும்அனுப்பி வைத்தனர். அவர்கள் தேர்தல் கமிஷனுக்கு என்ன அறிக்கை அனுப்பினர் என்று தெரியவில்லை.
ஆனால், இவர்களது அறிக்கையால் தேர்தல் கமிஷன் திருப்தியடைவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து வேறுஇரு அதிகாரிகளை மத்திய தேர்தல் கமிஷன் விசாரணைக்காக நியமித்துள்ளது.
இந்த இரு அதிகாரிகளும் இன்று சைதாப்பேட்டை தொகுதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி தேர்தல்கமிஷனுக்கு அறிக்கை அனுப்புவர். இதன் பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் கமிஷன் முடிவுசெய்யும்.
அதிமுகவினரின் முறைகேடுகள் குறித்து திமுக மிகப் பெரிய போராட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. டெல்லியில்எம்.பிக்களுடன் எம்.எல்.ஏக்களையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதே போல தனது பிறந்த நாளைக் கூட கருணாநிதி ரத்து செய்துவிட்டார். அவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார்என்று கூறப்படுவதால் தேர்தல் கமிஷன் இந்த விவகாரத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறது.
கவர்னர் ராம்மோகன் ராவ் மூலமாகவும் திமுக தேர்தல் கமிஷனை நிர்பந்தித்துள்ளது.
-
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications