எய்ட்ஸ் நோயால் மனமுடைந்து பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆத்தூர் பெண் ஒருவர் நோயின் தீவிரத்தினால்மனமுடைந்து சென்னை மருத்துவமனை ஒன்றில் தற்கொலை செய்து கொணடார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் காமகாபாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மனைவி நிர்மலா (28). இந்ததம்பதிக்கு திருமணமாகி 10ஆண்டுகள் ஆகிவிட்டன. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உண்டு.

சில மாதங்களுக்கு முன்பு நிர்மலா உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டார். நிர்மலாவை பரிசோதித்தமருத்துவர்கள் இவரை எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளதாக கூறினர். இதையடுத்து நிர்மலா அங்கேயே சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் நோயின் தாக்கம் அதிகரிக்கவே அவர் சென்னை-தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். கடந்த 20 நாட்களாகவே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது கணவரும்மகனும் உடனிருந்து நிர்மலாவை நன்கு கவனித்துக் கொண்டனர்.

தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நலத்தில் எவ்வித முன்னற்றமும் இல்லாமல் போகவே, மனமுடைந்த நிலையில்மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் நிர்மலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிர்மலாவின் பிரேதத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு எய்ட்ஸ் நோயாளிகளின் பிரேதத்தை பரிசோதனை செய்யும் வசதி இல்லாததால், அவரது பிரதேத்தைசென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நிர்மலாவின் பிரேதத்தை பெற்றுக் கொள்ள அவரது கணவர் மறுத்துவிட்டார். பிறகு, அவரது சகோதரர்கள் அவரதுபிரேதத்தை பெற்றுக் கொண்டனர்.

சமீபத்தில் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இதே தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் இதுபோலவே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+