தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் பெண் கைதி மர்ம சாவு
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த பெண் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி தூவிபுரத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரை சில நாட்களுக்கு முன் நடந்த நகைத் திருட்டு வழக்குஒன்றில் போலீஸார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போது நகை திருடியதைமுனியம்மாள் ஒத்துக் கொண்டதாகவும், அவரிடமிருந்து நகைகளைக் கைப்பற்றி விட்டதாகவும் போலீஸ் தரப்பில்கூறப்பட்டது. அதன் பிறகு முனியம்மாள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
அங்கு வெள்ளிக்கிழமை இரவு தனது சேலையில் தூக்குப் போட்டு முனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுமித் சரண்,ஆர்.டி.ஓ. உள்ளிட்டோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, தனது தாயாரின் சாவுக்குபோலீஸார்தான் காரணம் என்று முனியம்மாளின் மகன் கணேச மூர்த்திகூறியுள்ளார். அவர் கூறுகையில், என் தாயிடம் அசிங்கமான முறையில் போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.அவர் கண் முன்பாகவே என்னையும், என் தந்தையையும் அடித்து உதைத்தார்கள். இந்த நிலையில் மகளிர் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று கொன்று விட்டார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications