சைதை: தேர்தல் அதிகாரிகள் விசாரணை முடிந்தது
சென்னை:
சைதாப்பேட்டையில் இடைத் தேர்தலின் போது நடந்த முறைகேடுகள் குறித்து கடந்த 3 நாட்களாக விசாரணைநடத்திய தேர்தல் பார்வையாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் தங்களுடைய அறிக்கையை தலைமைதேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தனர்.
சைதாப்பேட்டை தொகுதி இடைத் தேர்தலில் ஏராளமான தில்லுமுல்லுகள் நடைபெற்றதாக திமுக, பாமக உள்ளிட்டஎதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி தேர்தல் கமிஷனிடம் புகார் ஒன்றையும் கொடுத்திருந்தனர். இதையடுத்துசைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் மத்திய தேர்தல் பார்வையாளர்களாகநியமிக்கப்பட்டிருந்த பூர்ஜியா மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டைதேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
அத்தொகுதி வேட்பாளர்கள், போலீஸ் அதிகாரிகள், போலீசார், திமுக ஏஜென்டாக இருந்த முன்னாள் திமுகஅமைச்சர் பொன்முடி, திமுகவினர் மற்றும் அதிமுகவினர் ஆகியோரிடம் கடந்த இரு நாட்களாக இவ்வதிகாரிகள்விசாரணை நடத்தினர்.
அதிமுக தரப்பில் வக்கீல் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது தரப்புக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. விசாரணைக்குப் பின் நள்ளிரவுக்கு மேல்தான் அதிகாரிகள் வெளியேவந்தனர். ஆனால் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டனர்.
இந்நிலையில் இன்றும் மூன்றாவது நாளாக பூர்ஜியாவும் சந்தோஷ் குமாரும் சென்னை தலைமைச் செயலகத்தில்தங்களுடைய விசாரணையை நடத்தினர்.
நண்பகலுக்குள் தங்களுடைய விசாரணை முழுவதையும் முடித்துக் கொண்ட இந்தத் தேர்தல் அதிகாரிகள், பிற்பகல்சுமார் 1 மணிக்கு தங்களுடைய அறிக்கையை தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அந்த அறிக்கையின் படி சைதாப்பேட்டை தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படுமா அல்லது அங்கு வாக்குஎண்ணிக்கையைத் தொடங்கலாமா என்பது குறித்து இன்று மாலைக்குள் தலைமைத் தேர்தல் கமிஷன் தன்னுடையமுடிவை அறிவிக்கவுள்ளது.