ஊட்டியை காப்பாற்றி வரும் நீலகிரி கலெக்டருக்கு "பசுமை விருது"
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாஹுவுக்கு தமிழக அரசின் பசுமை விருது (கிரீன் அவார்ட்) வழங்கப்படவுள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி இந்த விருது அவருக்கு சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுக்காக சுப்ரியா சாஹு மேற்கொண்ட முயற்சிகள், திட்டங்களைப் பாராட்டி இந்த விருதுஅவருக்கு வழங்கப்படுகிறது.
தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதித்த தடையை நீலகிரி மாவட்டத்தில் சிறந்த முறையில் அமல்படுத்தி வருவதற்காகசுப்ரியா சாஹு ஏற்கனவே பாராட்டப்பட்டுள்ளார்.
இதற்காக சிறந்த மாவட்ட கலெக்டர் விருதை சுப்ரியா பெற்றுள்ளார்.
இப்போது ஊட்டி அருகே காய்ந்து கிடக்கும் ஒரு மலைப் பகுதி கிராமத்தில் ஒரே நேரத்தில் 40,000 மரக் கன்றுகளை நடவும் சுப்ரியாதயாராகி வருகிறார். இதன்மூலம் கின்னஸ் சாதனை படைக்கவும் அம் மாவட்டம் திட்டமிட்டுள்ளது.
மிக வேகமாக மரங்கள் அழிக்கப்பட்டு வந்ததை தடுத்து ஊட்டியை காப்பாற்றி வருகிறார் சுப்ரியா. அவருக்கு இந்த கிரீன் அவார்ட்வழங்குவது மிகப் பொருத்தமானது தான்.












Click it and Unblock the Notifications