Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய தூதரக ஊழியருக்கு கொடுமைக்கு மேல் கொடுமை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் உளவுப் பிரிவினரால் தாக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ள இந்தியத் தூதரக ஊழியரைஇந்தியா கொண்டு செல்ல பாகிஸ்தான் போலீசார் தடை விதித்துள்ளனர். அந்த ஊழியரை ஏற்றிக் கொண்டுபுறப்பட்ட கார் நடுரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இரு நாட்டு உறவுகளை மேலும் மோசமாக்கும் என்று தெரிகிறது.

சமீபத்தில் அலுவலகத்தில் இருந்து தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இந்தியத் தூதரகத்தின் ஊழியர்குல்வந்த் சிங் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயால் கடத்திச் செல்லப்பட்டார். அவர்களால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்ட அவர் 5 மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

தாக்குதலில் அவரது இடுப்பு எலும்பு முறிந்துள்ளது. உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்குஇஸ்லாமாபாத்தில் சிகிச்சை அளிக்கவிடாமல் பாகிஸ்தான் அரசு தடுத்துவிட்டது.

குல்வந்த் சிங்கால் உட்கார முடியாத சூழ்நிலை உள்ளதால் இந்தியாவிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது.ஆனால், அதையும் பாகிஸ்தான் தடுத்துவிட்டது.

இதையடுத்து அவரை கார் மூலமாக இந்தியாவுக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியும்பாகிஸ்தான் அரசிடம் பெறப்பட்டது. இன்று காலை குல்வந்த் சிங், அவரது குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும்சில தூதரக ஊழியர்கள் சில கார்களில் இந்தியா புறப்பட்டனர். காரில் படுக்க வைக்கப்பட்டு அழைத்துவரப்பட்டார்.

ஆனால், இந்தக் கார்களை லாகூர் அருகே பாகிஸ்தான் போலீசார் தடுத்துவிட்டனர். இந்த விவரம் உடனடியாகஇந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானுடன் பேசி வருகின்றனர்.

குல்வந்த் சிங்கின் கார் பிற்பகல் வரை நடுரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எல்லையில் குண்டுமழை:

இதற்கிடையே எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து இந்தியாவை நோக்கி பீரங்கிகளால் சுட்ட வண்ணம்உள்ளனர். துப்பாகிகள், மார்ட்டர் கனரக துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் இந்தியப்பகுதியில் சில புதர்களில் தீப் பிடித்துக் கொண்டது. இந்தத் தீ தொடர்ந்து பரவி வருகிறது.

இந்தியாவும் இதற்கு பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தானுக்கு ஹிஸ்புல் தீவிரவாதிகள் எதிர்ப்பு:

இந்தியாவில் அப்பாவிகளைக் கொன்று வருவதை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு கடுமையாக் கண்டித்துள்ளது.இந்தத் தீவிரவாத அமைப்பில் பாகிஸ்தானியர்கள் கிடையாது. இது காஷ்மீரிகளைக் கொண்ட தீவிரவாத அமைப்பு. இந்தஅமைப்புக்கு பாகிஸ்தான் உதவி வருகிறது.

ஆனால், இந்த அமைப்பை சமீபத்தில் தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர பாகிஸ்தான் முயன்றது. இதை எதிர்த்த அதன்கமாண்டரை அமைப்பை விட்டே நீக்கியது. இதைத் தொடர்ந்து பல ஹிஸ்புல் தீவிரவாதிகள் இந்தியாவிடம்சரணடைந்துவிட்டனர்.

இந்த அமைப்பு காஷ்மீரில் அப்பாவி மக்களை பாகிஸ்தான் கொன்று வருவதை கண்டித்துள்ளது. காலுசக்கில் ராணுவத்தினரின்குடும்பத்தினர் கொல்லப்பட்டதை இந்த அமைப்பினர் வெட்கக்கேடாக நினைக்கின்றனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த லக்ஷர்-ஏ-தொய்வா தீவிரவாத அமைப்பினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் அந்த அமைப்புகூறியுள்ளது.

ஒன்றும் அறியா அப்பாவி மக்களை கொன்றது வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரிய செயல் என்று இந்த அமைப்பு கூறியுள்ளது.இந்த அமைப்பின் மன மாற்றம் குறித்து ராணுவ அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதற்காக இந்த அமைப்பினர் அனைவரும் திருந்திவிட்டதாகக் கூறிவிட முடியாது. இன்று எல்லைப் பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்திய ஒரு ஹிஸ்புல் தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.இவன் இந்தப் படையின் கமாண்டர் பொறுப்பில் இருந்தவன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+