சென்னையில் சிவசேனா பிரமுகர் வெட்டிக் கொலை
சென்னை:
சென்னையில் சிவசேனா பிரமுகர் ஒருவர் நேற்று இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை-கொருக்குப்பேட்டையில் உள்ள பார்த்தசாரதி பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன் (50).
சிவசேனா கட்சியின் வடசென்னை மாவட்டத் தலைவரான தீனதயாளன் நேற்று இரவு வண்ணாரப்பேட்டைபோலீஸ் நிலையத்துக்கு அருகே உள்ள பார்த்தசாரதி மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் திடீரென்று தீனதயாளனை வழிமறித்து அவரை சராமாரியாகஅரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டது.
ஏராளமான வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தீனதயாளன் உடனடியாக சென்னைஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் அங்குஉயிரிழந்தார்.
வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வெகு அருகிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்திருப்பதுஅப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழுமலை என்பவருக்கும் தீனதயாளனுக்கும் முன் விரோதம்இருந்ததாகவும் ஏழுமலையின் கூட்டாளிகள் தான் இந்தக் கொலையைச் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.போலீசாரும் இதே கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications