சட்டசடையில் பலம் இழந்த பா.ம.க.
சென்னை:
இடைத் தேர்தல் வெற்றி காரணமாக சட்டசபையில் அதிமுகவின் பலம் 135 ஆக உயர்ந்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் 17ஆகக் குறைந்து விட்டது.
சமீபத்தில் நடந்து டிந்த இடைத் தேர்தல் மூலம் கட்சிகளின் பலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக வுக்கு இதுவரை 133 எம்.எல்.ஏக்கள்இருந்தனர். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 20 எம்.எல்.ஏக்கள் இருந்தனர்.
வாணியம்பாடி மற்றும் அச்சிரப்பாக்கத்தில் அதிமுக வென்றதால் அக்கட்சியின் பலம் 135 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம்,அச்சிரப்பாக்கத்தை இழந்து விட்டதால் பாமகவின் பலம் 19 ஆக குறைந்துள்ளது.
அதேசமயம் அந்தக் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களனான சிவகாமி வின்சென்ட், முருகவேல்ராஜன் ஆகியோர் கட்சியிலிருந்துவிலகியுள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே பாமகவின் பலம் தற்போது 17 தான்.
சைதாப்பேட்டை முடிவு தெரிய வந்தால் திமுகவின் பலம் கூடுமா இல்லையா என்பது தெரிய வரும்.
சட்டசபையில் கட்சிகளின் பலம்:
மொத்த இடங்கள் - 234
அதிமுக - 135
திமுக - 30
தமாகா - 22
பாமக - 17
காங்கிரஸ் - 7
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 6
இந்திய கம்யூனிஸ்ட் - 5
பா.ஜ.க. - 5
பார்வர்ட் பிளாக் - 1
சுயேச்சைகள் - 2
எந்தக் கட்சியும் சாராதவர் - 1
சபாநாயகர் - 1
தனித்து செயல்படுவோர் - 2