ராமதாஸால் எனது உயிருக்கு ஆபத்து
மதுரை:
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகியதால் தனது உயிருக்கு ராமதாஸால் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் முருகவேல் ராஜன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பாட்டாளி மக்கள் கட்சி தனது கொள்கைகள், லட்சியங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்று விட்டது.தாழ்த்தப்பட்டவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை.
அடித்தட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய பாமக இன்று மேல் தட்டுவாசிகளின் கூடாரமாகி விட்டது. சுயநலமிகளின் கைப்பாவையாகடாக்டர் ராமதாஸ் செயல்படுகிறார்.
தென் மாவட்டத்தைச் சேர்ந்தவனான என்னைத் திட்டமிட்டு தென்னக மக்களிடமிருந்து பிரித்தார் ராமதாஸ். தென் மாவட்டங்களில்பாமகவை வளர்த்த என்னைக் கூப்பிட்டு திருச்சி, கரூர் பகுதிகளில் செயல்பட வைத்தார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்துஎன்னைப் பிரித்தார்.
ராஜதந்திரம் என்று நினைத்துக் கொண்டு சமீப காலங்களில் அவர் எடுத்த சில முடிவுகளால் கட்சியின் அனைத்துத் தரப்பு தொண்டர்களும்ஏமாற்றப்பட்டு விட்டனர்.
சாதிரீதியாக அவர் செயல்பட்ட முறையால் அவரது மனதில் எவ்வளவு பயங்கர சிந்தனைகள் இருக்கிறது என்பதை கட்சியில் இருக்கிறதாழ்த்தப்பட்ட மக்கள் புரிந்து கொண்டு விட்டோம்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாமகவில் இழைக்கப்பட்டு வரும் அவமானங்கள், அவமரியாதைகள் சொல்லில் அடங்காதவை. தேவேந்திரகுல மக்களுக்கு சமூக நீதி, அந்தஸ்து, கெளரவம் வாங்கித் தருவதாக கூறி நாடகமாடி விட்டார் ராமதாஸ்.
வந்தவாசி தொகுதியின் சுதந்திர எம்.எல்.ஏவாக செயல்பட நான் விரும்புகிறேன். எனவேதான், தாராபுரம் தொகுதியின் சிவகாமிவின்சென்ட் போல நானும் தனித்து செயல்படப் போகிறேன். பாமகவிலிருந்து நான் விலகி விட்டேன்.
பாமகவிலிருந்து நான் விலகியுள்ளதால் ராமதாஸ் மற்றும் பாமகவினரால் எனது உயிருக்கும், எனது குடும்பத்தினர் மற்றும் எனக்காகபதவிகளை உதறித் தள்ளிய மதுரை மாவட்ட பாமகவினர் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே உரிய பாதுகாப்பு அளிக்குமாறு ஆளுநர், சபாநாயகர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார் அவர்.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications