ராமேஸ்வரம் கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத கருவி: மக்கள் பீதி
ராமேஸ்வரம்:
ராமேஸ்வர கடற்கரையில் 22 அடி நீளமுள்ள ஒரு ராட்சதக் கருவி தானாகக் கரை ஒதுங்கியது. அதில் யு.எஸ்.ஏ.என்ற எழுத்துக்கள் இருந்ததால் அது அமெரிக்கா ஏவிய ராக்கெட்டோ என்று எண்ணி மக்கள் பீதி அடைந்தனர்.
ராமேஸ்வரம், பாம்பன் தெற்குவாடி பகுதியில் ராக்கெட் வடிவிலான மஞ்சள் நிறம் கொண்ட ஒரு பொருள் கரைஒதுங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அரசு அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பினர்.
சுங்க அதிகாரிகள் வந்து அப்பொருளைச் சோதனையிட்டனர். சுமார் 300 டன் எடை கொண்ட அந்தப் பொருளைசுமார் 50 பேர் சேர்ந்து கொண்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
அது ஒரு கடல் ஆராய்ச்சி தொடர்பான ராட்சத கருவி என்று தெரிய வந்துள்ளது. அதில் புளோட்டேசன்டெக்னாலஜீஸ், யு.எஸ்.ஏ. என்ற எழுத்துக்கள் இருப்பதைக் கண்ட மக்கள் அது அமெரிக்க ஏவிய ராக்கெட்டோஎன்று எண்ணிப் பீதி அடைந்தனர்.
ஆனால் அது ராக்கெட் அல்ல என்பதும் பின்னர் தெரிய வந்தது. ஏதாவது அமெரிக்கக் கப்பலில் இருந்து அக்கருவிதவறி விழுந்திருக்கலாம் அல்லது கடலில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான எண்ணெய்கிணற்றிலிருந்து அந்தக் கருவி உடைந்து கடல் வழியாகவே ராமேஸ்வரம் கடற்கரையில் ஒதுங்கியிருக்கலாம் என்றுஅதிகாரிகள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications