பாலன் கொலை: சசிகலாவுக்கு தொடர்பா?
சென்னை:
முன்னாள் திமுக எம்.எல்.ஏவும் பின்னர் அதிமுகவில் சேர்ந்தவருமான எம்.கே.பாலனின் கொலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழிசசிகலாவுக்குத் தொடர்பு இருப்பதாக பாலனின் மகன் மணிமாறன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஒரு மனுவும் தாக்கல் செய்துள்ளார். அதில், எனது தந்தை பாலனின் கொலை வழக்குத்தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள செந்தில் குமார் என்பவர் தனது வாக்குமூலத்தில் சசிகலா குறித்துக் கூறியுள்ளார். அவர் சொல்வதுஉண்மையாக இருந்தால் சசிகலாவுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது உறுதியாகி விடும்.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் எனது தந்தையிடம் பணம் கொடுத்து வைத்திருந்தார். அதை மீட்பதற்காகபோலீஸாரே பாலனைக் கடத்திச் சென்றனர். அந்த சமயத்தில்தான் அவர் இறந்திருக்கிறார்.
இந்தக் கொலையில் மாநில போலீஸாரிடமிருந்து நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.விசாரிக்க கோர்ட் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மணிமாறன் தனது மனுவில் கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசிம்ம பாபு மற்றும் பாக்கியராஜ் ஆகியோர், இந்த வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளநடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
மேலும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பாலனின் உடல், அவருடையதுதானா என்பதைக் கண்டறிய டி.என்.ஏ. சோதனைக்கும் கோர்ட்உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கொலை பல மர்ம முடிச்சுகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications