டிரான்ஸ்பர் கேட்டு உண்ணாவிரதம்: கைதிகளின் திமிர்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் கைதிகளில் 2 பேர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து சிறையில் பரபரப்புஏற்பட்டது.

சேலம் மத்திய சிறைக்கு சமீபத்தில் பாளையங்கோட்டை சிறையிலிருந்து முருகன் மற்றும் மூர்த்தி ஆகிய கைதிகள் மாற்றப்பட்டனர்.

சேலம் சிறைக்கு தங்களை மாற்றப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக தங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரியும்இருவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக மேலும் 2 கைதிகளும் உண்ணாவிரதம் இருந்தனர்.

சிறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். இருப்பினும் அது பலிக்கவில்லை. இந்த நிலையில் முருகனும்,மூர்த்தியும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து இருவரும் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு குளுக்கோஸ் கொடுக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க இரு கைதிகளும் மறுத்தனர். மிகுந்தபோராட்டத்திற்கு பிறகு அவர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்.

சிகிச்சைக்குப் பிறகு இருவரும் மீண்டும் சேலம் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+