சைதையின் வரலாறு
சென்னை:
சைதை தொகுதியில் முதன் முதலாக 1957ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் வெற்றிபெற்றது.
ஆனால் அதன் பிறகு நடந்த தேர்தல்களில் பெரும்பாலும் திமுக தான் வென்று வந்தது. இத் தொகுதியில் இதுவரை மொத்தம் 12 முறைதேர்தல் நடந்துள்ளது. இதில் 8 முறை திமுக தான் வெற்றி பெற்று தனது அசைக்க முடியாத கோட்டையாக வைத்திருந்தது.
1957ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். காலத்தில் ஒரு முறையும் (இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு), ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு நடந்த ஒரு தேர்தலிலும் அதிமுக இங்கு வெற்றி பெற்றது. அப்போதெல்லாம் அனுதாப அலை காரணமாகத்தான் அதிமுக வென்றது.
ஆனால், தற்போது அதிமுக வெற்றி பெற்றுள்ளது அதன் உண்மையான பலத்தினால் தான்.
திமுக தலைவர் கருணாநிதி மொத்தம் 2 முறை இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதில் முதல் முறை அவர் போட்டியிட்டுவென்றபோது தான் அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
இத்தனை பெருமை பெற்ற சைதை தொகுதியில் திமுக தோல்வியைத் தழுவியுள்ளது. தோல்விக்கு, அதிமுகவினரின் கள்ள ஓட்டும், தொகுதிமுழுவதும் மறு வாக்குப் பதிவு நடத்தாததும் தான் காரணம் என திமுக கூறுகிறது.
எப்படியிருப்பினும் திமுக கோட்டைக்குள் நுழைந்த 3-வது அதிமுக எம்.எல்.ஏ. என்ற பெருமையை ராதாரவி பெற்று விட்டார்.












Click it and Unblock the Notifications