மாணவியை கற்பழித்த போலி சாமியாருக்கு 9 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

குறி சொல்வதாகக் கூறி பெண்ணை கற்பழித்த டுபாக்கூர் சாமியாருக்கு 9 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த போலி சாமியாரின் பெயர் பச்சிலை ராமன். இவன் துடியலூர் பகுதியில் பல்வேறு வேடங்களில் சாமியாராக நாடகமாடி வந்தான்.கடந்த 1999ம் ஆண்டு துடியலூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி இவரிடம் வந்தார்.

அவருக்கு பேய் பிடித்திருப்பதாகவும் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறிய இவன் அந்தப் பெண்ணை தனி இடத்துக்குஅழைத்துச் சென்று கற்பழித்து விட்டான்.

இதையடுத்து துடியலூர் போலீஸார் பச்சிலை ராமனைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சடையாண்டி, பெண்ணைக்கடத்திய குற்றத்திற்காக பச்சிலை ராமனுக்கு 4 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ. 5000 அபராதம் வித்தார்.

அத்தோடு கற்பழித்த குற்றத்திற்காக 9 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இரு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க அவர் உத்தரவிட்டார். இதனால் இந்த சாமியார் 9 ஆண்டுகள் சிறையில் தான் சககைதிகளுக்கு குறி சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+