மக்கள் ஆதரவு எங்களுக்கே: ஜெயலலிதா
சென்னை:
சைதாப்பேட்டை உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் எங்கள் அரசை மக்கள்முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்பது உறுதியாகிவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
சைதாப்பேட்டை வெற்றி மிக இனிப்பானது. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் எங்கள் அரசுநடந்து கொள்ளும். அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் தான் இந்த வெற்றிகள்.
சைதாப்பேட்டையில் மிகவும் அவசரப்பட்டு மறு தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
3 தொகுதிகளிலும் தேர்தலை திடீரென கமிஷன் அறிவித்தது. இதனால் நாங்கள் பட்ஜெட் கூட்டத் தொடரைக் கூடஉடனடியாக முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததால் பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களுக்கு தந்த உறுதி மொழிகளைக் கூட நிறைவேற்ற முடியவில்லை.
இந்தத் தேர்தல்களை ஒத்தி வைக்குமாறு நாங்கள் தேர்தல் கமிஷனிடம் கூறினோம். ஆனால், அதை அவர்கள்ஏறகவில்லை. இந்தத் தேர்தல் காரணமாகவும், தேர்தல் விதிகள் காரணமாகவும் அரசே செயல்படாமல் போனது.
கருணாநிதி மீது பாய்ச்சல்:
சைதாப்பேட்டையில் எங்கள் வெற்றியை தாமதப்படுத்தத் தான் திமுகவால் முடிந்ததே தவிர வெற்றியைப் பறிக்கமுடியவில்லை.
மறு தேர்தல் நடத்தப்பட்ட இடங்களில் திமுகவை விட அதிமுக 942 வாக்குகள் அதிகம் வாங்கியுள்ளது.
அதிமுக வெற்றி பெறுவதை ஜீரணிக்கும் மன தைரியம் கருணாநிதிக்கு இல்லை.












Click it and Unblock the Notifications