நாராயணனனை மீண்டும் ஜனாதிபதியாக்கலாம்: ஜெயலலிதா
சென்னை:
கே.ஆர்.நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்குவதில் எந்தத் தவறும் இல்லை என தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நாட்டின் அடுத்த ஜனாதிபதியை அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்போது எல்லையில் நம்முடன் பாகிஸ்தான் போரிட்டு கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதியை தேர்வு செய்வதில்நாம் சண்டையிட்டு பிரிந்தால் அது உலக நாடுகள் மத்தியில் இந்தியா குறித்து தவறான இமேஜை உருவாக்கிவிடும்.
ஜனாதிபதி தேர்வு குறித்து என்னுடன் பிரதமர் வாஜ்பாய் பேசினார். ஆனால், நான் எந்த உறுதிமொழியும்தரவில்லை. அடுத்த வாரம் 12ம் தேதி டெல்லி செல்லும்போது அவருடன் பேசுவேன்.
கே.ஆர்.நாராயணனையே மீண்டும் ஜனாதிபதியாக்குவதில் எந்தத் தவறும் இல்லை என்று கருதுகிறேன் என்றார்.
இலங்கை பிரதமருடன் சந்திப்பில்லை:
இந்தியா வரும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேைய சந்திப்பீர்களா என்று கேட்டபோது, நான்டெல்லியில் இருக்கும்போது இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சென்னையில் இருப்பார். இதனால்அவரை சந்திக்க வாய்ப்பில்லை என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications