பெங்களூரில் ரணில்: சாய்பாபாவை சந்திக்கிறார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று இந்தியா வருகிறார். தனது பயணத்தை அவர் பெங்களூரில்இருந்து துவக்குகிறார். பெங்களூரில் அவர் 2 நாட்கள் தங்கியிருப்பார்.

அவரது வருகையையொட்டி பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று மாலை சிறப்பு விமானத்தில் பெங்களூர் வரும் அவர் நாளை ஒயிட்பீல்டில் உள்ள சத்யசாய் ஆஸ்ரமத்துக்குச்சென்று சாய்பாபாவைச் சந்தித்து ஆசி பெறுகிறார்.

பின்னர் இன்போசிஸ், விப்ரோ, எலெக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்.

இரவில் ஆளுநர் ரமாதேவி அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். திங்கள்கிழமை அவர் டெல்லி புறப்பட்டுச்செல்வார்.

அவரது வருகையையொட்டி பெங்களூரில் இன்றும் நாளையும் பல இடங்களில் போக்குவரத்து மாறுதல்களும்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரை சந்தித்துப் பேச்சுநடத்திவிட்டு அவர் சென்னை வழியாக இலங்கை திரும்புவார்.

அவர் சென்னையில் இருக்கும்போது முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் இருப்பார். இதனால், இருவரும் சந்தித்துப்பேச வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+