பிறந்தா என்ன? இறந்தா என்ன?

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்:

பிறப்பு சான்றிதழுக்குப் பதிலாக இறப்புச் சான்றிதழ் கொடுத்து சிறப்பான கடமையாற்றியுள்ளார் தாசில்தார்.

குளித்தலையைச் சேர்ந்த குணசேகரன். இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் சுத்தமாக எழுதப் படிக்கத்தெரியாதவர்கள். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 89ம் ஆண்டில் பிறந்த தங்கள் மகனுக்கு பிறப்பு சான்றிதழ்வாங்க 2000ம் ஆண்டில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகம் சென்றனர்.

இவர்களிடம் தங்களது வழக்கமான வசூலை முடித்த தாசில்தார் அலுவலக ஊழியர்கள் பின்னர் சான்றிதழைஅவர்களே பூர்த்தி செய்து தந்தனர்.

இந்தத் தம்பதி தங்கள் மகனுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்க அந்த ஊழியர்கள் இறப்பு சான்றிதழ் படிவத்தை பூர்த்திசெய்தனர். இறப்புச் சான்றிதழ் தரும்போது அதற்கான மருத்துவமனையின் ஆதாரத்தை சரிபார்க்க வேண்டும்.

ஆனால், லஞ்சம் தான் கொடுத்துவிட்டார்களே.. அவர்களை ஏன் சிரமப்படுத்த வேண்டும் என்ற நல்ல மனசுடன்சரிபார்க்கும் விஷயத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அவர்களாகவே, குழந்தை அரசு மருத்துவமனையில் இறந்ததுஎன்று எழுதிக் கொண்டனர்.

இதையடுத்து சான்றிதழை தயார் செய்து தாசில்தாரின் கையெழுத்துடன் இவர்களிடம் தந்தனர்.

சுத்தமான கைநாட்டுகளான அந்தத் தம்பதி அதை பிறப்புச் சான்றிதழாக நினைத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தனர்.

தங்கள் மகனுக்கு முத்துக்குமார் என்று பெயரிட்டனர். அவனும் வளர்ந்து 13 வயதை எட்டிவிட்டான். எதேச்சையாககண்ணில் பட்ட அந்த சான்றிதழைப் பார்த்த அவன் அதிர்ச்சியடைந்தான்.

அப்பா நான் செத்துப் போயிட்டதா ஏன் சர்டிபிகேட் வாங்கி வச்சுருக்க? என்று அவன் கேட்ட பிறகு தான் இந்தவிவகாரமே வெளியில் வந்துள்ளது.

தாசில்தார்கள் அலுவலகம் தான் ஊழலின் ஊற்றுக் கண் என்று சமீபத்தில் நாம் எழுதியிருந்தோம். அது மீண்டும்நிரூபணமாகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+