வாஜ்பாயைச் சந்திக்கிறார் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
டெல்லி:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது தங்களுக்கு மிகவும்திருப்தி அளிப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் வந்து சென்றதைத் தொடர்ந்து எல்லையில் நிலவி வந்த கடுமையான பதற்றம் வெகுவாகத் தணியஆரம்பித்தது.
அதன் விளைவாக இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானின் விமானங்கள் பறக்க இந்தியா விதித்திருந்த தடைசமீபத்தில் நீக்கப்பட்டது.
மேலும் பாகிஸ்தானை கடல் வழியாகத் தாக்குவதற்காக குஜராத்தின் கட்ச் வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்தஇந்தியப் போர்க் கப்பல்களும் நேற்று மாலை திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டன. அந்தக் கப்பல்கள் தற்போதுமும்பைக்கும் இதர துறைமுகங்களுக்கும் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
தற்போதைக்கு எல்லையில் பதற்றம் தணிந்திருந்தாலும் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்தீவிரவாதிகளை முழுமையாக ஒடுக்குவாரா என்பது சந்தேகம் தான் என்று வாஷிங்டனில் ஆர்மிடேஜ் நேற்றுதெரிவித்தார்.
இந்நிலையில் எல்லைப் பதற்றத்தை மேலும் தணிக்கும் விதமாக ரம்ஸ்பீல்ட் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்த ரம்ஸ்பீல்ட் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை சந்தித்துசுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார்.
எல்லையில் பதற்றம் தணிவதற்காக இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தங்களுக்கு மிகவும் திருப்திஅளித்துள்ளதாகவும் இதற்காக இந்திய அரசைப் பாராட்டுவதாகவும் பின்னர் நிருபர்களிடம் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஷ்ராவையும் சந்தித்த ரம்ஸ்பீல்ட் இன்று பிற்பகல் பிரதமர்வாஜ்பாயையும் சந்திக்கவுள்ளார்.
எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ஏராளமான இந்திய ராணுவத்தினரை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்என்று வாஜ்பாயிடம் ரம்ஸ்பீல்ட் கேட்டுக் கொள்ளவுள்ளார்.
இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவே ரம்ஸ்பீல்ட் நேராகப் பாகிஸ்தான் சென்று அந்நாட்டுத்தலைவர்களிடமும் பேச்சு நடத்தவுள்ளார்.
எப்போது வேண்டுமானாலும் எந்தக் காரணத்துக்காகவும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே திடீரென்றுபோர் வந்து விடும் என்று அமெரிக்கா இன்னும் பயந்து கொண்டு தான் உள்ளது.
எனவே எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணிப்பதற்காக எவ்வாறெல்லாம் ராணுவத்தினரைக்குவிக்கலாம் என்பது பற்றிய ஒரு திட்டத்தையும் இந்திய-பாகிஸ்தான் தலைவர்களிடம் ரம்ஸ்பீல்ட் எடுத்துக்கூறுவார் என்று தெரிகிறது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications