கல்யாணத்திற்கு 3 நாளுக்கு முன்பு காதலியுடன் ஓடிய வாலிபர்
சென்னை:
சென்னை கொரட்டூர் பகுதியில் கல்யாணத்திற்கு 3 நாளே இருக்கும் நிலையில், ஒரு வாலிபர் தான் காதலித்து வந்த மாணவியுடன்தலைமறைவாகி விட்டார்.
கொரட்டூர் அக்ரஹாரன் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் பட்டறைத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வருகிற 13ம் தேதிகல்யாணம் நடக்க இருந்தது. பத்திரிக்கைகள் எல்லாம் அடிக்கப்பட்டு வினியோகமும் செய்யப்பட்டுவிட்டது.
இந் நிலையில் நண்பர்களுக்கு கல்யாணப் பத்திரிக்கை கொடுப்பதாக கூறி விட்டு திங்கள்கிழமை காலை மோகன் வெளியில் சென்றார்.ஆனால் வீட்டுக்குத் திரும்பவில்லை.
அதேபோல, மோகனின் எதிர் வீட்டைச் சேர்ந்த லட்சுமி என்ற கல்லூரி மாணவியையும் காணவில்லை.
இருவரும் காதலித்து வந்ததாகவும், வீட்டில் ஏற்பாடு செய்த கல்யாணம் பிடிக்காததால் காதலி லட்சுமியுடன், மோகன் வீட்டை விட்டுவெளியேறி விட்டதாகவும் தெரிகிறது.
கொரட்டூர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications