தீவிரவாதிகளுக்குள் கோஷ்டி சண்டை: 7 பேர் சாவு
ஜம்மூ:
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்குள் நடந்த பயங்கரமாக கோஷ்டிச் சண்டையில்7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல் காயமடைந்தனர்.
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு இடையே சமீபகாலமாக மோதல்வெடித்துள்ளது. லஷ்கர் அமைப்பில் உள்ளவர்கள் பாகிஸ்தானியர்கள். ஹிஸ்புல் அமைபில் பெரும்பான்மையினர்காஷ்மீரிகள்.
சர்வதேச நெருக்குதல் காரணமாக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளது.இதனால், தீவிரவாதிகளுக்கு பணம் வருவதிலும் ஆயுதங்கள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளின்தகவல் தொடர்பு அமைப்புகளும் அமெரிக்க நெருக்குதலால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தீவிரவாதிகள் பெரும் நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்குள் பகுதியைப் பிரித்துக் கொள்வதிலும்பணத்தை பங்கிடுவதிலும் பிரச்சனை வெடித்து வருகிறது.
இந் நிலையில் பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தெய்பா தீவிரவாதிகளுக்கும் காஷ்மீரிகளைக் கொண்ட ஹிஸ்புல்முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கும் இடையே காஷ்மீரின் தோடா மாவட்டத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுஎன்பதில் பிரச்சனை எழுந்தது.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நேற்றிரவில் வாக்குவாதம் எழுந்தது. பின்னர் இருவரும் பிரிந்துசென்றுவிட்டனர். தொடர்ந்து இன்று அதிகாலை இது மோதலாக வெடித்தது. கிஸ்த்வார் என்ற இடத்தில் இருதரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர்.
இந்த பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில் 7 தீவிரவாதிகள் இறந்தனர். இதில் ஒரு தீவிரவாதி பாகிஸ்தானின்லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவன். மற்ற 6 பேரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த 6 பேரும்ஷகீல் அன்சாரி என்பவனின் கோஷ்டியைச் சேர்ந்த முஜாகிதீன் தீவிரவாதிகள்.
மேலும் 3 தீவிரவாதிகள் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தரப்பினரும் கிரனைட்களையும் வீசிக் கொண்டனர். இதனால் அந்தப் பகுதியேபோர்க் களமாக காட்சியளித்தது.
இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு ராணுவத்தினரும் போலீசாரும் அங்கு விரைந்தனர். இதையடுத்து தீவிரவாதிகள்தப்பியோடிவிட்டனர்.
தீவிரவாதிகளுக்குள் மோதல் வெடித்துள்ளதால் ராணுவம் மகிழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு பழிவாங்க ஹிஸ்புல்தீவிரவாதிகள் இனி லஷ்கர் கும்பலை விரட்டும். அவர்களுக்கு ஆதரவாக இன்னொரு பாகிஸ்தான் கும்பலானஜெய்ஷ்-ஏ-முகம்மத் கிளம்பும்.
இதனால் இந்த மோதல் இனி தொடர் கதையாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications