எங்கள் கட்சியை உடைக்க அதிமுக சதி: ஆளுநரிடம் பா.ம.க. புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியை முதல்வர் ஜெயலலிதா உடைக்க முயல்வதாகவும் அதைத் தடுக்கக் கோரியும் ஆளுநர்ராம்மோகன் ராவிடம் அக் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்கும் வேலைகள தீவிரமாக நடந்து வருகின்றன. இதையடுத்து தனதுஎம்.எல்.ஏக்களை ஆட்களை வைத்து உளவு பார்த்து வருகிறார் ராமதாஸ்.
இந் நிலையில் தங்கள் கட்சியை அதிமுக உடைக்க முயல்வதாக ஆளுநரிடம் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மனுகொடுத்துள்ளார்.
மணி தலைமையில் பல்வேறு பா.மா.க. பிரமுகர்களும் எம்.எல்.ஏக்களும் கவர்னர் மாளிகைக்குச் சென்று இந்தமனுவைத் தந்தனர். அதே போல சட்டசபை செயலாளரிடமும் ஒரு மனுவைத் தந்தனர்.
ஏற்கனவே முருகவேல் ராஜன், சிவகாமி வின்சென்ட் போன்ற தலித் எம்.எல்.ஏக்களை கட்சியிலிருந்துபிரித்துவிட்டது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications