ராதாரவி, 2 புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
சென்னை:
சமீபத்தில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ராதாரவி, பூவராகமூர்த்தி மற்றும்வடிவேலு ஆகிய 3 பேரும் இன்று எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
கடந்த மே 31ம் தேதி சைதாப்பேட்டை, அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இவற்றில் அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளின் முடிவுகள் மட்டும் கடந்த 2ம் தேதிஅறிவிக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கத்தில் அதிமுக வேட்பாளரான பூவராகமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.வாணியம்பாடியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்ட ஆர். வடிவேலு வென்றார்.
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவினர் ஏராளமான அளவில் தேர்தல் முறைகேடுளில் ஈடுபட்டனர் என்றுதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புகார் கூறவே, அங்கு 58 வாக்குச் சாவடிகளில் கடந்த 6ம் தேதி மறு தேர்தல்நடத்தப்பட்டு, மறு நாள் வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்தத் தொகுதியிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. சுமார் 11,925 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் ராதாரவிஇத்தொகுதியைத் திமுகவிடமிருந்து கைப்பற்றினார்.
வெற்றி பெற்ற இந்த மூன்று பேரும் இன்று எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக சட்டசபைசபாநாயகர் காளிமுத்து இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.