ரணில்- ஜெ. சந்திப்பு: அமைதி பேச்சுக்கு ஆதரவு கேட்டார்
சென்னை:
இலங்கை பிரமர் ரனில் விக்கிரமசிங்கே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து இலங்கைப் பிரச்சினைகுறித்து விவாதித்தார். இதன் பின்னர் இன்று அவர் இலங்கை திரும்பினார்.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்த விக்கிரசிங்கே, நேராக ஆளுநர் மாளிகைக்குப் போனார். இதற்குமுன்பாகவே அங்கு வந்துவிட்டார் ஜெயலலிதா.
ஆளுநர் மாளிகை வந்த ரணிலையும் அவரது மனைவி மைதரேவையும் ஜெயலலிதா பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
விக்கிரசிங்கே மற்றும் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ராம் மோகன் ராவ் விருந்தளித்தார்.
இதன் பின்னர் விக்கிரசிங்கேயும், ஜெயலலிதாவும் தனியாக சந்தித்துப் பேசினர்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர தமிழக அரசின் ஆதரவு அவசியம் என ஜெயலலிதாவிடம் ரணில் விக்கிரமசிங்கே வலியுறுத்தியதாகக்கூறப்படுகிறது.
இதையடுத்து தனது 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கே இன்று கொழும்பு திரும்பினார்.சென்னை விமான நிலையத்தில் அவரை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழியனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications