குழந்தையின் இறந்த உடலுடன் ரோட்டில் மயங்கிக் கிடந்த தாய்
மதுரை:
பிறந்து ஒரே நாளில் இறந்த குழந்தையின் உடலுடன் மயங்கிக் கிடந்த தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மதுரையில் இச் சம்பவம் நடந்தது. சாலையோரத்தில் மயங்கிக் கிடந்த ஒரு பெண்ணை சோதனையிட்டபோதுஅவரிடம் ஒரு பை இருந்தது. அதில் ஒரு குழந்தையின் இறந்த உடல் இருந்தது.
இதையடுத்து அந்தப் பெண் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள்நடத்திய சோதனையில் அந்தப் பெண்ணுக்கு நேற்று தான் பிரசவம் நடந்தது தெரியவந்தது.
அந்தக் குழந்தை நேற்று தான் பிறந்துள்ளது. எப்பேது இறந்தது என்று தெரியவில்லை. இறந்த குழந்தையின்உடலுடன் அவர் நடந்து செல்லும்போது ரோட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
பிரசவம் நடந்ததில் தளர்ந்து போயிருந்த அந்தத் தாய் ஏன் குழந்தையின் உடலுடன் தனியே மருத்துவமனையில்இருந்து வெளியே வந்தார் என்று தெரியவில்லை.
அந்தக் குழந்தையின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்காக அனுப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications