ஆயுத இறக்குமதி: உலகில் 5வது இடத்தில் இந்தியா
ஸ்டாக்ஹோம்:
உலகில் அதிக அளவில் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் 5வது நாடு இந்தியா என்று ஆய்வு ஒன்றில்தெரியவந்துள்ளது.
அதே போல ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவை ரஷ்யா விஞ்சிவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்தஅமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு இந்தியா ரூ. 4.71 பில்லியன் டாலர்களுக்கு ஆயுதங்களை வாங்கியுள்ளது. ஆயுதங்களை இறக்குமதிசெய்வதில் 10 வது இடத்தில் உள்ளது பாகிஸ்தான். அந்த நாடு 2.93 பில்லியனுக்கு ஆயுதங்களை வாங்கியுள்ளது.
1997-2001 ஆண்டு காலத்தில் உலக அளவில் ஆயுத விற்பனை குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காதனது ஆயுதங்களை பல நாடுகளுக்கு விற்க மறுத்தது தான்.
கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்கா 44.82 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது.1998ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆயுத ஏற்றுமதியில் 65 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி அமெரிக்காவையே விஞ்சி வருகிறது. அந் நாட்டின் ஆயுத ஏற்றுமதி6 மடங்கு அதிகரித்துள்ளது.
உலகின் மிக அதிக அளவில் வாங்கிக் குவித்து வரும் நாடாக தைவான் உள்ளது. சீனாவுடனான் பிரச்சனைகாரணமாக 11.4 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்கள் வாங்கியுள்ளது தைவான்.
சீனாவின் ஆயுத இறக்குமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications