For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு: மீனவ கிராமங்களுக்கு கடும் சேதம்

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

தென் மேற்குப் பருவக் காற்று மழை காரணமாக தமிழகத்தின் தென் கோடிப் பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. காற்றும் மிக வேகமாக வீசுகிறது.

கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் பல மீனவ கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதில் பல வீடுகள் கடலுக்குள்அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சின்னமுட்டம் உள்பட 15 கடலோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடும் சூறாவளிக் காற்று வீசுவதால் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல முடியாமல் மீனவர்கள் திண்டாடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X