17-ஐ கற்பழித்த 56-க்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
மாடு மேய்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியைக் கற்பழித்த 56 வயது நபருக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுத்து விட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவருக்கு வயது 56. இத்தனை வயதாகும் இவர், அந்தப் பகுதியில்மாடு மேய்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை கற்பழித்து விட்டதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸார் வெங்கட்ராமனைக் கைது செய்தனர்.
தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி வெங்கட்ராமன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. ஆனால் அவரது ஜாமீன்மனுவை நீதிபதி பாலசுப்ரமணியம் தள்ளுபடி செய்துவிட்டார்.
இதனால் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார் வெங்கட்ராமன்.












Click it and Unblock the Notifications